Showing posts with label ராஜீவ். Show all posts
Showing posts with label ராஜீவ். Show all posts

01 August 2015

செய்தி

சென்னையின் பகட்டு ஏரியாக்களில் பெரிய பெரிய அரசியல் கட்சிகள் அஞ்சலி பேனர் வைப்பது பெரிய விசயமில்லை. கருப்பர் நகரத்தில் சின்னச்சின்ன தலித் கட்சிகள் மற்றும் அந்தந்த வட்டாரத்தின் நற்பணி மன்றங்கள் சர்ச்சுகள் இந்துக் கோவில்கள் தம் கைக்காசை போட்டு நம்மில் ஒருவர் என அப்துல் கலாமுக்கு வைத்திருக்கும் அஞ்சலித் தட்டிகள் என்ன சொல்கின்றன என்பது அறிவுஜீவி கொசு மூளை அலசல்களுக்கு அவ்வளவு சுலபத்தில் எட்டக்கூடியதன்று.

23 February 2014

உணர்வும் உணர்ச்சியும்

திருமுருகன் காந்தி, தேசிய ஊடகத்தில் கத்தோ கத்து கத்தி தேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்ததன்படி பார்த்தால், ராஜீவ் கொலையின் பின்னால் இருப்பவர்கள், சுப்ரமண்ய சுவாமியும் சந்த்ரா சாமியும் என்று ஆகிறது. ஒரு வாதத்தத்துக்கு இதை உண்மை என்று எடுத்துக் கொண்டால், மனித வெடிகுண்டான தனுவும் சிவராசனும் சுபாவும் இந்தியர்களாகவும் ஏர் உழவன் சின்னம் வைத்திருந்த அப்போதைய ஜனதா கட்சி உறுப்பினர்களாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? இப்படிப் பார்த்தால் அஞ்சா நெஞ்சன் பிரபாகரனின் வீரத்துக்கல்லவா பேரிழுக்கு வந்து சேரும்!