Showing posts with label பெருமாள்முருகன். Show all posts
Showing posts with label பெருமாள்முருகன். Show all posts

04 February 2015

நரையும் திரையும்

பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது.