Showing posts with label பிரமிள். Show all posts
Showing posts with label பிரமிள். Show all posts

02 March 2023

ஆபீஸ் அத்தியாயம் 22 கெளரவமாக வாழ்வது எப்படி

பரீக்‌ஷாவில் இருந்தது என்னவோ ஒன்றரை வருடம்தான் என்றாலும் சுற்றிலும் இலக்கியவாதிகளாக இருந்ததாலோ என்னவோஉள்ளே வரும்போதுமு. மேத்தா முற்போக்கு என கல்லூரி கவிதைப் போட்டிகளின் விட்டகுறை தொட்டகுறையாக ஊசலாடிக்கொண்டிருந்தவன்பரீக்‌ஷாவை விட்டு வெளியேறும்போது  தீவிர இலக்கியம் சினிமா என்று முழுவதுமாகத் தலைகுப்புறக் குதித்துவிட்டிருந்தான்.

16 February 2023

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

08 February 2023

சார்ந்தும் சாராமலும்

"மாமல்லன் எழுதும் ஆபீஸ் நாவல் தொடர் மெட்ராஸ் பேப்பரில் யாரும் படிக்கிறீங்களா"

சில நாட்களுக்குமுன், காலையில் இப்படியொரு செய்தி வந்தது வாட்ஸப்பில். 

28 February 2017

காசில்லா கோடீஸ்வரன்

குமாஸ்தாக்களாலான 70-80களின் இலக்கிய உலகில், ஒரு வங்கி குமாஸ்தாவுக்கு உரிய ஒழுங்குடனும் விவேகத்துடனும் நான் கவிஞன் எனது தொழில் இலக்கியத்தில் இயங்குதல். இதுவே என் உழைப்பு. என் உணவை சம்பாதிக்கத் தனியாக வேறு ஏன் நான் உழைக்க வேண்டும், மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் பிரமிள். 

19 June 2016

நெறியும் சொரியும்

//'இலக்கியச் சிறார்' என்பதெல்லாம்,தன்னைத் தவிர பிறர் எவரையும் ஏற்காத காழ்ப்போடு் கூடிய நச்சுச்சொற்கள்.// 

19 January 2012

எந்துண்டி வஸ்தி?

நகுலன் எழுதிய எல்லாவற்றிலும், இல்லாத அர்த்தங்களை இட்டு நிரப்பி தமக்குத்தாமே இலக்கிய டோப்பா மாட்டிக்கொண்டு இளிக்கும் போலிகளை சுளுக்கெடுக்கும் பிரமிளின் விமர்சனக் கவிதை இது.

19 October 2011

சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை

Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த, 

மொட்டை மாடியில்

21 September 2011

வெசாவும் பிரமிளும் திமிர் பிடித்த சண்டைக்காரர்களா?

06 JulyRamji Yaho

ஆனாலும், உங்களின் வாசிப்பு ஆர்வம், முயற்சிகள் பிரமிக்க வைப்பவை சார். இன்னொரு மனிதரால் இந்தச் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது ஐயம்.

21 August 2011

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

ரெண்டுங்கெட்டானால் கிடைத்த பொக்கிஷம்

அணியாத பூணூலை எனக்கு அணிவித்த ரெண்டுங்கெட்டான் 1917லேயே நான் எழுதியதாய் ஒரு துணுக்கைப்பிடித்துத் தொங்கியதைப் பார்த்தன்மூலம் எனக்குக் கிடைத்த பொக்கிஷம்தான் http://www.thamizham.net/ இந்த தளம்.

27 July 2011

சூ·பி இயக்கம் – பிரமிள் (ஆபிதீனுக்கு நன்றி)


ஜூன் 10, 2008 இல் 2:12 மாலை (ஆன்மீகம், கட்டுரை, பிரமிள்

திரு. கால சுப்ரமணியம் தொகுத்த பிரமிளின் ‘பாதையில்லாப் பயணம்’ நூலிருந்து…

24 July 2011

ஆன்மீக சாமானம்


நான் 1983’ காசர்கோடு ஃபிலிம் சொசைட்டியில் மணி கௌலின் உஸ்கி ரொட்டி படத்தை பார்த்தேன். படம் எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை.

05 June 2011

காந்தியின் அஹிம்சைப் போராட்டம் பற்றி பிரமிள்

காந்தி திரட்டிய ஜன சக்தியின் அம்சங்கள் எதுவும் இந்த இயக்கத்தில் இருக்கவில்லை. அஹிம்சா யுத்தத்தின் தீவிர நிலைக்கு இவர்கள் தயார் செய்யப் படாதவர்களுமாவர். பெருமளவிற்கு அரசகருமங்களில் ஈடுபட்டிருந்த ஒரு பூர்ஷுவா அணி இது. திடீரென எழுந்து நின்ற அப்போதைய பிரச்சனையை அன்றைய சரித்திர கட்டத்தில் கெளரவிக்கப்பட்ட அஹிம்சைக் கருவி மூலம் சந்தித்த திடீர் எதிர்வினை மட்டுமே இந்த இயக்கத்தில் தெரிந்தது. எனவே சிங்கள இனவாதக் கருவியாகத் திரண்டு வந்த காலிப்பட்டாளத்தின் தாக்குதலை இந்த ’அஹிம்சைப் போராளிகள்’ தாங்கி ஸ்தலத்திலேயே காயங்களுடனோ பிணங்களாகவோ வீழ்ந்து கிடக்க முடியாத பலஹீனர்களாக தங்களைக் காட்டிக் கொண்டார்கள். சிதறி ஓடினார்கள். இது ஒரு பகுதியினரால் அஹிம்சா ஆயுதத்தின் தோல்வியாகக் குறிப்பிடப்ப்டுவதை ஒட்டி இங்கே விபரம் பெறுகிறது. உண்மையில் இது உட்கார்ந்து தெரிவிக்கும் (Sit-in) முறை மட்டுமே ஆகும்.

24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன்.