Showing posts with label ஜெயமோகன். Show all posts
Showing posts with label ஜெயமோகன். Show all posts

16 February 2023

அன்பை வாங்குதல்

நானும் ஒருகாலத்தில் புத்தகம் வாங்கியிருக்கிறேன். ஆனால், யாரிடமும் ஆட்டோகிராஃப் வாங்கியதில்லை. அசோகமித்திரன் கி. ராஜநாராயணன் பிரபஞ்சன் என்று கொடுத்த புத்தகங்கள் கையெழுத்தோடு இருக்கின்றன. அவற்றில் இருப்பவை கேட்டுவாங்கியவையல்ல. பிரியத்துடன் அவர்களாகப் போட்டுக்கொடுத்தவை. 

08 February 2023

மூன்று சூப்பர் ஸ்டார்கள்

45 வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கொள்கிறவனிடம்  என்ன எதிர்பார்ப்பீர்கள் - எழுதியிருப்பவை அமரகாவியங்களோ இல்லையோ குறைந்தபட்சம் அவன் எழுத்தில் தகவல் பிழைகளோ மொழிக் குளறுபடிகளோ தர்க்கப் பிழைகளோ இருக்காது என்று நம்புவீர்கள் இல்லையா. 

16 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 5

ரமேஷ் பிரேதனிடமிருந்து மெய்ல் வந்திருக்கிறது. இதுகள் இவ்வளவு பெரிய சாக்கடை என்பது தெரிந்திருந்தால் உதவிசெய்ய நான் இறங்கியிருக்கவே மாட்டேன். நான் இறங்கியதோடு அல்லாமல் உங்களையும் இழுத்துவிட்டு உங்களது பணத்தை வீணடித்தமைக்காக என்னை மன்னியுங்கள் நண்பர்களே. 

12 January 2018

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 4

                                                              11.01.2018
                                                              புதுச்சேரி

திருமிகு மாமல்லன் அவர்களுக்கு வணக்கம்.

29 December 2017

ரமேஷ் பிரேதன் அப்டேட்ஸ் - 3

விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி எந்த எல்லைக்கும் போய்விடுகிறீர்கள், அதுவே உங்களுக்கான பலம் மற்றும் பலவீனம் என்று ரமேஷ் பிரேதன் பற்றிய பதிவிற்கு பேஸ்புக்கில் மறுமொழியிட்டிருந்தார் சித்ரா சம்பத் என்கிற பெண்மணி. 

14 January 2017

அடத் தேவாங்கே

யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன். 

20 November 2016

வரவேற்கப்பட வேண்டிய ஆவேசமும் வழக்கம்போல சில அபத்தங்களும்


//மூன்றாவதாக, ஹவாலா. இந்தியாவின் மிகப்பெரும் செல்வம் மானுட உழைப்பு. முதன்மையாக நாம் ஏற்றுமதிசெய்வதே கைகளையும் மூளையையும்தான். அந்தப்பணம் எங்கும் பதிவாகாமல் வரிகட்டப்படாமல் இங்கே வரும்போது நம் பொருளியல் பெரும் இழப்பை சந்திக்கிறது.// 

அடக் கொடுமையே இதுவா ஹவாலா. 

19 June 2016

நெறியும் சொரியும்

//'இலக்கியச் சிறார்' என்பதெல்லாம்,தன்னைத் தவிர பிறர் எவரையும் ஏற்காத காழ்ப்போடு் கூடிய நச்சுச்சொற்கள்.// 

22 March 2016

மகாமுத்ராவில் செல்ஃபி எடுத்துக்கொள்ள நேர்ந்த கதை

நேற்று விடியற்காலை ஆள் தூக்கும் வேலை. வேலை முடித்துத் திரும்பும்போது 7 மணி. QMC சிக்னலில் நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குச் சென்றால் என்ன என்கிற யோசனை வந்தது. நேரே செல்ல பச்சை விழவே, சரி வேண்டாம் போ என வண்டியை பெஸண்ட்நகர் நோக்கி முடுக்கினேன். 

04 February 2015

நரையும் திரையும்

பெயர் குறிப்பிடமுடியாத தெருவொன்றில், நெரிசலுக்கிடையில் வேகமாய் போகையில், எதிரில் வந்தவர் பக்கவாட்டில் பிடித்துக்கொண்டு வந்த பெரிய பையில் மோதி, பைக்கிலிருந்து கீழே விழுந்தேன். தடுப்பான் உருளை முதலில் தரையில் மோத வலது கால் முட்டி அடுத்து மோதிற்று. அணிச்சையாய் இருகைகளும் தரையில் வேகமாய் ஊன்றியதால் அடிபட்டாலும் முட்டி தப்பியது. பின்னால் வந்து முன்னால் போன பெருசு ஸ்கூட்டரை நிறுத்தித் திட்டத் தொடங்கிற்று. அவர் பெண்டாட்டியோ ஸ்கூட்டரைவிட்டு இறங்கி தெருவில் நின்று கழுவி ஊற்றவே தொடங்கிவிட்டது. 

25 December 2014

மறைபொருள் மாணிக்கனாருக்கு மெச்சினார்க்குக் கடியனார் எழுதிய உரை

அந்நிய நிலத்தின் பெண் - மனுஷ்ய புத்திரனுக்கு ஜெயமோகனின் இணைய வாழ்த்துரை 
<மனுஷ்யபுத்திரனின் ‘அன்னியநிலத்தின் பெண்’ அதன்பின் தமிழில் வரும் முக்கியமான பெருந்தொகுதி.> 
இப்படி பல்க்கா கவிதை புக்கு போடுவது ஒன்றும் தமிழுக்குப் புதிதல்ல. (என் பரிந்துரையின் பேரில்) ஏற்கெனவே தேவதேவனுக்கு தமிழினி செய்ததுதான்.

19 April 2014

21 December 2013

ஆசான்!

தலித் மக்களின் அழிவு பற்றி நாவல் எழுதிவிட்டதாக புரொமோட் செய்துகொள்கிறாயே, நவம்பர் 2012ல் தர்மபுரி கலவரம் நடந்தபோது மூடிக்கொண்டுதானே இருந்தாய் என்று கேட்டால்,

06 November 2013

கொம்பு

பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம், உலகம் அறியாமல், இலக்கியவாதிகளின் அசட்டைச் சிரிப்புக்கு ஆளாகி, விடுதலைக்குள் முடங்கி கிடந்தது பல்லாண்டு காலம். 

27 September 2013

ரஸவாத லிங்கமும் குறியீட்டின் நுனியும்

புறப்பாடு II – 1, லிங்கம் September 20, 2013

ஜெயமோகனின் தமிழில் முனை என்கிற சொல்லே இல்லை போலும். இல்லாவிட்டால் எது முனை எது நுனி என்கிற பேதமின்றி எதற்கெடுத்தாலும்  நுனி என்று எழுதுவாரா?