ஈரோடுக்கு அனுப்ச்சாச்சு. இண்டுவிஜுவல் காப்பிய வாங்கிக்கங்கோ என்றபடி, டேபிளில் இருந்த தடி ஃபைலில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து அவனிடம் கொடுத்து, அதிலேயே இருந்த ஆபீஸ் காப்பியில் கையெழுத்தைப் போடச்சொல்லி ஃபைலை அவனுக்காய் திருப்பினார்.
Showing posts with label சுகுமாரன். Show all posts
Showing posts with label சுகுமாரன். Show all posts
03 March 2023
16 January 2013
ஜாலியும் ஸீரியஸும்
அலுவல் நிமித்தமாய் நேற்று மதியம் எண்ணூர் போய்விட்டு மாலையில் திரும்பிக்கொண்டிருக்கையில் சுகுமாரனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
01 February 2012
ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்
''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது.
28 January 2012
19 October 2011
சடையே இல்லாவிட்டாலும் பேனுக்குக் குறைவில்லை
Monday, October 17, 2011 6:37 PM கவிதா ரசனைக்கு இணையக் காப்புரிமை வைத்திருக்கும் இலக்கிய குருஜி தூக்கிப்பிடித்த,
மொட்டை மாடியில்
06 October 2011
சீனப் பெருஞ்சுவர் - ஃப்ரான்ஸ் காஃப்கா
சீனப் பெருமதில் அந்த நாட்டின் வடக்கு முனையில் முடிவடைந்திருந்தது. தென் கிழக்கிலிருந்தும் தென் மேற்கிலிருந்தும் இரண்டு பகுதிகளாக வந்து கடைசியில் அங்கே ஒன்று சேர்ந்தது. கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இரண்டு தொழிலாளர் அணிகள் பகுதி பகுதியாகக் கட்டி முடிக்கும் கட்டுமான உத்தியை சிறிய அளவில் பயன்படுத்தியிருந்தார்கள். அதை இப்படிச் செய்தார்கள்: இருபதுபேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட நீளத்தைக் கட்ட வேண்டும். ஐநூறு காதம் என்று வைத்துக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு குழு முதலில் கட்டி முடித்த பகுதியுடன் இணையும்படி அதே நீளமுள்ள இன்னொரு பகுதியைக் கட்டியது. ஆனால் இந்த இணைப்பிடத்தைக் கட்டி முடித்த பின்பு, அதாவது ஆயிரம் காதம் கட்டிய பின்பு, ஆரம்பமாவதல்ல மதிலின் கட்டுமானம் . மாறாக, மறுபடியும் கட்டுமானத்தைத் தொடர்வதற்காக இந்த இரண்டு அணிகளும் முற்றிலும் வேறான சமீபப் பகுதிகளூக்கு மாற்றப்பட்டன. இதனால் ஏராளமான இடைவெளிகள் உண்டாயின. பின்னர் மெல்ல மெல்லவே இந்த இடைவெளிகள் சரி செய்யப்பட்டன. மதில் கட்டி முடிக்கப்பட்டு விட்டது என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரையும் சில இடங்களில் முடிக்கப்படவில்லை. உண்மையில் ஒருபோதும் முழுமையாக்கப்படாத இடைவெளிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அது பரிசோதனை செய்யப்பட முடியாததாக இருக்கலாம். அல்லது மதிற் சுவரின் பிரம்மாண்டமான கட்டுமானம் காரணமாக , ஒரு மனிதனால் தன்னுடைய கண்களாலோ அல்லது தீர்மானத்தாலோ பரிசோதனை செய்ய முடியாதது என்று காட்டுவதற்காக எழுப்பப்பட்ட கட்டுக்கதைகளில் ஒன்றாக இருக்கலாம்.
04 October 2011
தாஸ்தயேவ்ஸ்கியின் வாழ்வில் ஓர் அறியப்படாத நிகழ்ச்சி - போலந்து சிறுகதை
ஓர் இரவு. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தனது கையெழுத்துப் பிரதியில் திருத்திக் கொண்டிருந்தார் தாஸ்தயேவ்ஸ்கி.திடீரென்று யாரோ கதவைத் தட்டினார்கள். இந்த நேரங் கெட்ட நேரத்தில் எந்த விருந்தாளியும் வருவது வழக்கமில்லை. தனக்கோ ஒரு வேலையாள் கூடக் கிடையாது. பிறகு இந்த அகாலத்தில் யாராக இருக்கும்?
04 July 2011
நான் பிறந்தது தீர்ப்பு சொல்வதற்காக அல்ல நேசிக்க - சுகுமாரன்
பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார் டி.எஸ்.இலியட். அவை: எண்ணிக்கைப் பெருக்கம்,வித்தியாசம், சீரான படைப்புத்திறன். பாப்லோ நெரூதாவை விட இலியட்டின் மதிப்பீட்டுக்குப் பொருத்தமான வேறொரு நவீன கவிஞர் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த நோக்கில்தான் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நேர்காணலொன்றில் 'இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று குறிப்பிட்டார்.
06 April 2011
சுகுமாரன் என்னைக் கிண்டலடிக்கிறானோ! - அஞ்சலில் வந்த கவிதை
| hide details 10:01 AM (2 hours ago) |
--
SUKUMARAN
'Madhyamavati'
MGRA F 53 Anayara
Thiruvananthapuram 695029
Phone 98950 99248/ 9489294023/ 0471 2741287
வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு
@ சுகுமாரன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று
மதுரை விடுதியறையில்
மூட்டைப் பூச்சியைச் சந்தித்தேன்.
03 April 2011
லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)
Miroslav Penkov (1983 - )
மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே' என்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும் அதில் இருந்தது.
01 April 2011
விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (சுகுமாரன்)
நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.
18 March 2011
நீ கேளேன்! நீ கேளேன்!
என்னிடம் ஒரு பழக்கம். ஒன்று பிடித்துவிட்டால், எனக்குப் பிடித்தவர்களை ஓட ஓடத் துரத்திப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அடுத்தவர் மனநிலை பற்றிய எண்ணமே இருக்காது. இது தவறு என்று எல்லோரையும் போல எனக்கும் தெரியும். ஆனால், ஒருவன் மேல் சாமி வந்திருக்கையில் செய்யும் காரியங்களுக்கு அவன் எப்படிப் பொறுப்பாக முடியும்? என்னிடமிருந்து தப்பித்துக் கொள்ளாதது, மாட்டிக் கொண்டவரின் தவறும்கூடத்தான் இல்லையா? ஆனால் இந்த தர்க்கத்தில் இருக்கும் நியாயம், என்னைத் தவிர இந்த உலகில் ஒருவருக்குமே ஏன் புரிவதில்லை.
15 January 2011
இருமுடிதாங்கி ஒருமனதாகி குருவெனவே வந்தோம்
தமிழ் இலக்கியத்தை உய்விக்க விஷ்ணுவின் பதினோராவது அவதாரமாக ஸ்பெசல் பிறவி எடுத்திருக்கும் முக்கால தெய்வமாம் ஜெயமோகன் அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வந்தனங்களுடனும் நன்றியுடனும்
Subscribe to:
Posts (Atom)