Showing posts with label கைபேசி. Show all posts
Showing posts with label கைபேசி. Show all posts

04 December 2017

எதோ என்னாலானது

1980முதல் 1994வரை எழுதி வெளியான 30 கதைகளை 4 புத்தகங்களாகவும் 2010ல் உயிர்மை வெளியிட்ட முழுத் தொகுப்பையும் நானே வெளியிட்ட சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரலையும் அமேஸானில் 6 eBookகுகளாக 24.10.17 முதல் வெளியிடத்தொடங்கினேன். அவற்றில் இதுவரை 54 பிரதிகள்  விற்றிருக்கின்றன. 5702 பக்கங்கள் படிக்கப்பட்டுள்ளன.  இன்று வெளியான சின்மயி விவகாரம் மட்டுமே 424 பக்கங்கள் வாசிக்கப்பட்டிருக்கின்றன. 

27 September 2015

சிறுகதையா இந்த வாழ்க்கை


முச்சந்தியொன்றில் நெடு நேரமாய் நின்றிருந்தேன். இரவு ஏறிக்கொண்டே இருந்தது. எதிர்ப்புறமிருந்து நண்பர்கள் வரவேண்டும். வந்துகொண்டு இருக்கிறோம் என்று கைபேசியில் சொல்லிக்கொண்டு இருந்தார்களே தவிர வந்தபாடில்லை. பக்கவாட்டில் திடீரென ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். திக்கென்றது. எப்போது எங்கிருந்து அங்கு வந்து நின்றார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் நின்றிருந்தது வசீகரித்தது. அவர் காலருகில் டிரம் போன்ற ஒரு தோல் கருவி இருந்தது.