Showing posts with label காலச்சுவடு. Show all posts
Showing posts with label காலச்சுவடு. Show all posts
25 February 2023
சுரணையின் மரணம்
இது, காலச்சுவடு பதிப்பகத்தில் புனைவு என்னும் புதிர் வெளிவந்தபோது ஏற்பட்ட பிரச்சனையைப் பற்றிப் பேசுகிற புத்தகம்.
18 February 2023
02 December 2021
பெப்பெ
02 டிசம்பர் 2021
இந்திய காப்புரிமைச் சட்டப்படி, ஆசிரியரின் வாழ்நாள் + மறைவுக்குப் பின் 60 வருடங்கள் வரை மட்டுமே காப்புரிமை.
06 November 2021
தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச் சிறுகதைகள், இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம்.
இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை ஆனந்தவிகடன் உயிர்மை ஆகிய பத்திரிகைகள், ’பிரச்சனை பண்ணுவார்கள்’ என்று வெளியிடத் தயங்கின. வெளியிடும் அளவுக்குத் தரம் இல்லை என்று காலச்சுவடு நிராகரித்தது.
பத்திரிகைகளும் சூழலும் எப்படியான முற்போக்கு / பிற்போக்குக் கருத்துச் சுதந்திர நெருக்கடியில் சிக்கிக்கொண்டு இருக்கின்றன என்பதற்கான சாட்சியம் இது.
அச்சுப் புத்தகம் வாங்க: விமலாதித்த மாமல்லன்
கிண்டிலில் வாங்க: தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)
08 November 2017
தவிப்பு - சிறுகதைத் தொகுதி
1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில் 64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
13 January 2017
23 June 2016
இந்த சாமி நம்ம சாமிடா
நல்லி குப்புசாமிக்கடுத்து எல்லோரையும் மதிப்பவராகவும் எல்லோராலும் மதிக்கப்படுபவருமாகவும் நம் காலத்து FB நாயகனாக இலக்கியத்தில் வலம் வரும் இன்னொரு ஆளுமை மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமிஜி அவர்கள்.
13 January 2014
16 January 2013
ஜாலியும் ஸீரியஸும்
அலுவல் நிமித்தமாய் நேற்று மதியம் எண்ணூர் போய்விட்டு மாலையில் திரும்பிக்கொண்டிருக்கையில் சுகுமாரனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.
06 January 2013
01 February 2012
ஹாஜி முராத் - டால்ஸ்டாயின் கடைசி நாவல் - சுகுமாரன்
''அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி.புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது.பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்து கிடந்தது. சீரான உழவு சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை.ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தது. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா என்று சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே ' மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழிக்கிறான்?' என்று யோசித்தேன். எனக்கு முன்னால் பாதையின் வலது பக்கத்தில் சின்னப் புதர் தெரிந்தது. நெருங்கிப் பார்த்தபோது சற்று முன்பு, நான் அநாவசியமாகப் பறித்து வீசியெறிந்த நெருஞ்சி என்று தெரிந்தது. அந்தத் 'தார்த்தாரிய' தாவரத்துக்கு மூன்று கிளைகள் இருந்தன. ஒரு கிளை உடைந்து வெட்டப்பட்ட கை போல ஒட்டிக்கொண்டிருந்தது. மற்ற இரு கிளைகளிலும் பூக்கள் இருந்தன.அவை முன்பு சிவப்பாக இருந்து இப்போது கருமையேறியிருந்தன. ஒரு தண்டு ஒடிந்திருந்தது. மறு பாதி நுனியில் அழுக்குப் புரண்ட பூவுடன் தொங்கிக் கொண்டிருந்தது. அடுத்த பூவும் கறுப்புச் சேறு படிந்து இருந்தாலும் நிமிர்ந்து நின்றிருந்தது. ஏதோ வண்டிச் சக்கரம் அந்தச் செடியின் மேல் உருண்டு போயிருக்க வேண்டும். ஆனாலும் செடி மறுபடியும் நிமிர்ந்து எழுந்திருக்கிறது. அதனால்தான் விறைப்பாக நின்றாலும், உடலின் ஒரு பகுதி பிய்த்து எடுக்கப் பட்டதுபோலவோ, குடல்கள் உருவப்பட்டது போலவோ, ஒரு கை முறிக்கப்பட்டதுபோலவோ, கண்கள் பிடுங்கப்பட்டதுபோலவோ அது ஒரு பக்கமாகத் திருகியிருந்தது. எனினும் தன்னுடைய சகோதரர்களை அழித்த மனிதனுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நின்றது.
28 January 2012
காசு - விலிருந்து வந்த காசோலை
மனதுக்குப்பிடித்த சந்தோஷமான காரியமே தொழிலாகவும் அமைவதென்பது எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி.
- லால்குடி ஜெயராமன்
06 February 2011
கேட்டதும் அடிப்பவனே சென்ஷி! சென்ஷி!
| hide details 10:43 AM (1 minute ago) |
நாகராஜனின் உலகம் - சுந்தர ராமசாமி
நாகராஜனின் அச்சேறிய உலகம் 200 கிராம்தான் இருக்கும். வருடத்திற்கு அரை டன் கழித்துக்கொண்டிருக்கும் பட்டாளத்தின் மத்தியில், பாவம் நாகராஜன்! மூன்று லட்சத்திச் சொச்சம் விற்பனைப் பத்திரிகைகளில் இவர் உருப்படி ஒன்றுகூட வெளியானதில்லை. அவருடைய மாணவர்களுக்குக்கூட, கணக்கு வாத்தியாரின் இந்த விஷமங்கள் தெரிந்திருக்க நியாயமில்லை. புரட்டிப் பார்த்த உறவுப் பெண்களோ ‘சீ, அசிங்கியம்!’ என்று சொல்லிவிட்டார்களாம்!
Subscribe to:
Posts (Atom)