கதை அல்லது புனைவு என்பது, வெறும் எழுத்துக்களை வைத்துக்கொண்டு, கண்ணெதிரில் நடப்பதைப் போன்ற உணர்வை வாசகனுக்கு உருவாக்குவதுதான். மிகச்சிறந்த கலைஞர்கள், மிகக்குறைந்த தீற்றல்களில் தத்ரூபத்தைத் தருவித்துவிடுகிற தேர்ந்த ஓவியனைப்போல மிகக்குறைந்த சொற்களைப் பயன்படுத்தி வியப்பில் ஆழ்த்திவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், சில பகுதிகளை வாசகனாகப் புரிந்துகொள்ளும்படிச் சொல்லாமலும் விட்டுவிடுகிறார்கள் - குறிப்பாக இலக்கிய எழுத்தாளர்கள்.
Showing posts with label கலை. Show all posts
Showing posts with label கலை. Show all posts
19 March 2023
01 December 2021
எக்ஸ்டர்னல் ட்ரைவ்
ஹலோ வெஸ்டர்ன் டிஜிட்டல் 1.5 TB எக்ஸ்டர்னல் ட்ரைவ் இருக்கா
1.5 கம்பெனில வரதில்ல ஒண்ணு இருக்கு ரெண்டு இருக்கு.
அமேஸான்ல 1.5 இருக்கே.
அது சர்வீஸ்டு கம்பெனிது இல்லே.
ரிஃபர்பிஷ்ட்டுனா சொல்றீங்க.
ஆமா.
03 March 2018
வழிகாட்டி - தி. ஜானகிராமன்
கு. ப. ராஜகோபாலன் காலமானது 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதி. கடைசி ஒரு வார காலம் என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. அவருடைய உயிர்பற்றி ஒரு அச்சமும், ஏக்கமும், வயிற்றில் நம நமவென்ற கலக்கமும் சுமந்து அழுத்திக் கொண்டிருந்த ஞாபகம். என் தகப்பனார், மனைவி – இருவரிடமும் அடிக்கடி நான் அவரைப் பற்றி ஏதாவது சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்த ஞாபகம். ‘கரிச்சான் குஞ்சுவும்’ என்னோடு சேர்ந்து அழுது கொண்டிருந்தான். அவன் என்னைவிட உணர்ச்சி வசப்படுகிறவன். இந்த பயமும் கரையலும் ஏப்ரல் 21-ம் தேதிக்குப் பிறகு என்று நினைக்கிறேன். ராஜகோபாலன் கிடந்த கிடையும், பட்ட சித்திரவதையும் ஒரு அநிச்சயத்தையும், கலவரத்தையும் எங்கள் இருவர் மனதிலும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்த ஞாபகம். அவருக்கு முழங்காலுக்குக்கீழ், ஆடுசதை கல் சதையாக இறுகிக் கிடந்தது. கடுகுப் பத்துப் போட்டிருந்தார்கள். அந்த எரிச்சல் வேறு. காலுக்குள், வெளியே – இரண்டு பக்கமும் எரிச்சல். அது பையப்பைய உயிரை அரித்துக் கொண்டிருந்தது என்று கடைசி மூன்று நாட்களுக்குமுன் தான் சந்தேகம் வந்தது எங்களுக்கு. ஏற்கனவே, மெலிந்து, துவண்ட அந்தப் பூஞ்சை உடல் எப்படி இந்த வதையைத் தாங்குகிறது, இன்னும் எத்தனை நாள் தாங்கும் என்று நாங்கள் கிலிக்கு ஆளாகி, அவரைவிட்டு அகன்று அப்பால் வந்தபோதெல்லாம், அவரைப் பற்றியே புலம்பிக் கொண்டிருந்தோம்.
20 October 2012
அறியாத முகங்களை அறிந்த முகங்கள்
இந்த வசதி எனக்கு இல்லை என்பது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கடந்த காலம் பற்றி இஷ்ட்டத்துக்கும் நான் அள்ளிவிட முடியாது.
19 September 2011
இலக்கியம், கெளரவ ஜெபமாலை உருட்டலில்லை.
சண்டை நம் ஈகோவுக்காக இல்லாமல் நமக்கு சரியெனப்படும் இலக்கிய தரப்பிற்கானது எனில் கட்டாயம் இலக்கியத்தரமாக அமைந்தே தீரும் # ’தரம்’ என்பது உயர்தர ஜெபமாலை உருட்டலில்லை.
09 September 2011
வளர்
பூமியின் தோற்றுவாயாய்த் தோன்றிய எரிமலைக் குழம்பு
உருகிக் குளிர்ந்த பாறையில்,
எங்கோ எப்போதோ இறந்தவர்களுக்கு,
நடுகற்களை உருவாக்கி ஏற்றுமதி செய்ய,
ராப்பகலாய் செத்துக்கொண்டிருக்கும்
தொழிலாளிகளின் உழைப்பை முதலீடாக்கிக்
கூலியைப் பிந்திப்பிந்தித்தந்து
வாழ்ந்து கொண்டிருப்பவர்
கொண்டுவரப்போகும் அந்நியச் செலாவணிக்காகக்
கதவை சீல் வைக்கக்
கண்விழித்தாகவேண்டிய வேலைக்கு இடையில்
முடிந்தால் இலக்கியம் வளர்.
02 August 2011
கைவினையும் கலையும்
@Dyno Buoy : அய்யனார், ஸ்ரீதரின் அதே கதையை முயற்சித்திருக்கிறார்னு பாத்ததுமே எனக்கும் எழுதிப்பாக்கணும்னு ஆர்வம் ஏற்பட்டது. சிறுபிள்ளைத்தனமா இதெல்லாம் தேவையான்னு கொஞ்சம் வெக்கமாவும் இருந்துது. ஆனா எழுதணும்னு தோணியதே மேலோங்கியதாலே அய்யனாரைப் படிக்கலை. கமெண்ட்ஸ் மட்டும் படிச்சிகிட்டு வந்தேன்.
27 July 2011
கலையும் நிலையும்
நேற்று மாமல்லன் எழுதிய இந்த கட்டுரை படித்தேன்.
இது போன்ற கட்டுரைகள் முடியும்போது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் வருகிறதே ? அது ஏன் தோழர் ? ஒருவேளை சுஜாதாவின் சிறுகதைகள், ஒ ஹென்றியின் புனைவுகளின் தாக்கமாக இருக்குமோ ?
15 July 2011
அடுத்து ஒரு விண்ணப்பம்
| hide details 12:12 PM (20 hours ago) |
மாமல்லன் சார் - நன்றி என்று ஒரு வார்த்தை சொல்வது பொருத்தமாக இராது.
23 May 2011
கொர்த்தசாரா? ஆரு? சத்தியமாத் தெரியாது!
ஃபேஸ்புக்கில்....
Ravichandran Kandasamy May 23 at 11:22pm
மிக்க நன்றி.
கல்குதிரை வேனிற்கால இதழில், 'கொர்த்தசாரின் புதினங்களில் கலையும், புரட்சியும் 'என்ற பொருளில் மொழிபெயர்ப்பு கட்டுரை வெளியாகியுள்ளது. வாசித்து தங்களின் மேலான கருத்துக்களைக் கூறவும்.
06 January 2011
அவமானங்களைக் கடந்தால்தான் ஆன்மீகம்.
கோயம்புத்தூர் டாக்டர் கோமானே!
நாங்கள்ளாம் அண்ணாவாட்டம். 67 தேர்தல்ல, காங்கிரஸ்காரனுவ ’தேவடியாளுக்குப் பொறந்த திருமகனே’ அப்பிடின்னு எழுதின தட்டியை, இருட்டுலக் கொண்டாந்து திமுக ஆஃபீஸ் மின்னால வெக்கிறாய்ங்க.
கூட இருக்கறவங்க எல்லாம் கொதிக்கிறாங்க. அமைதியா சொல்றார் அண்ணா:
ரெண்டு பெட்ரோமாக்ஸ் லைட்டை எடுத்துத் தட்டிக்கி ரெண்டு பக்கமும் வைங்க போற வர்ரவங்க நல்லா படிக்கட்டும்னு.
30 August 2010
நன்றி நவிலல்
தமிழ்ப்பறவை said...
மிக மிக உபயோகமாக இருக்கும் எனக்கு. நன்றிகள் ஐயா.எழுத்துக்கலை 2க்காக காத்திருக்கிறேன்.
இன்னொரு விஷயம் சொன்னால் எரித்து விடுவீர்களோ எனவும் பயம். இருந்தாலும் சொல்லி விடுகிறேன். எழுத்துப் பிழைகளை மட்டும் கொஞ்சம் கவனியுங்களேன்.ஃப்ளோவைத் தடுத்துவிடுகிறது.
August 27, 2010 3:56 PM
விமலாதித்த மாமல்லன் said...
பொன் வாசுதேவனுக்கப்புறம், உங்களைப் போன்ற உற்ற நண்பர் ஒருவர் கிடையாது சார். தயவுசெய்து கட்டுரையை அப்படியே நகல் எடுத்து பிழை திருத்தி (பிழையிருக்கும் இடங்களைக் அடிக்கோடிட்டு எனக்கு madrasdada@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள் உங்கள் சந்ததி நீடூழி வாழும். எனக்குத் தமிழ் தட்டச்சு தெரியாது. இங்கிலீஷுக்கும் பெரிய வாழ்வில்லை. கடந்த 15 வருடங்களில் தமிழ் எழுதாமல் படிக்காமல் போனதில் ர் ற் ன் ண் ந் என்னைத் துவம்சம் செய்கின்றன. தொடர்ந்த பயிற்சி இல்லையேல் மொழி மறக்கும். தந்தை வழிமொழியான மராத்தி சுத்தமாக மறந்து .....இழுத்துக் கொண்டு போகிறது கட்டுரையாக....
23 August 2010
21 August 2010
ஆன் தி வாட்டர் ஃப்ரண்ட்
Elia Kazan - USA
1930 களில் எலியா கஸான் வறுமையுடன் துருக்கியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். அமெரிக்கா பொருளாதாரத் தேக்கத்தால் கடும் அவதியில் இருந்த காலம். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானார். சிறிது காலத்திற்குப்பின் நம்பிக்கையிழந்து கட்சியிலிருந்து விலகினார். 'க்ரூப் த்தியேட்டர்' என்கிற அமைப்பில் இயங்கினார். அந்த அமைப்பில் இடதுசாரி சாய்நிலைவாளர்களும் அறிவுஜீவிகளும் அங்கம் வகித்தனர். சிறந்த பல நாடகங்களை கஸான் இயக்கினார். திரைபடங்களை இயக்கத் தொடங்கினார்.
17 August 2010
இண்டர்வ்யூ
Federico Fellini - இத்தாலி (1987)
இன்று Inception பார்த்தேன் மிரட்டி இருக்கிறார் Christopher Nolan. தொழில்நுட்ப பிருமாண்டம் பிரமிப்பை உண்டாக்குகிறது. கனவுக்குள் கனவுக்குள் கனவு.
1994ல் கல்கத்தா திரைப்படவிழாவின் நிறைவுப்படமாகவும் Felliniக்கு அஞ்சலியாகவும் இண்டர்வ்யூ படத்தைத் திரையிட்டார்கள். பொதுவாகவே விழாவின் நிறைவுப் படம்,விரைவு ரயில் பிடிப்பதிலேயே குறியாக இருப்பதனால் சாய்ஸில் விடப்பட்டுவிடும். அன்று ரயிலைப் பிடித்த பலபேர் படத்தைத் தவற விட்டதற்காக ரொம்பவே வருத்தப்பட்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)