Showing posts with label ஊழல். Show all posts
Showing posts with label ஊழல். Show all posts

01 September 2011

தட்டிக் கேளுங்கள் ஊழல் ஒழியக்கூடும் குல்லாபோட்டு ஒழியாது

ஒரு சம்பவம் (என்று நானல்ல சொன்னது நண்பர்)

2005. என் தங்கைக்கு அண்ணா பல்கலையில் இடம் கிடைத்திருந்தது. கல்விக்காக லோன் பெறும் முயற்சியில் இருந்தேன். அப்போது நிதி அமைச்சர் சிதம்பரம் அனைத்து வங்கிகளுக்கும் கல்விக்காக லோன் கேட்டு விண்ணப்பிபவர்களுக்கு கட்டாயம் லோன் வழங்கவேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாக பேப்பரில் செய்திகள் வந்தன. சரி அண்ணா பல்கலை க்கழகம் என்பதால் லோன் ஈசியாகக் கிடைக்கும் என்று நினைத்து இந்தியன் வங்கி மதுரையில் அப்ளை செய்தோம்.

31 August 2011

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

29 August 2011

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு - 2


@ஜ்யோவ்ராம் சுந்தர்: 
<சுஜாதா வசனம் ஞாபகம் வருது : சிங்கப்பூர்ல சட்டத்தை மீறுவதற்கு லஞ்சம் கொடுக்கறான். இங்க சட்டப்படி நடக்கறதுக்கும் லஞ்சம் கொடுக்கணும்.>

பரவாயில்லையே தேவைப்படும்போது சுஜாதாகூட உதவறார் பாருங்க. சிறு துரும்பும் பல் குத்த உதவும்னு சும்மாவா சொன்னாங்க?

21 August 2011

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும்

அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.