27 April 2011

தற்காலத்தில் கற்காலம்

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி தழுவா நெறிமுறையின் - மேதினியில்
சுட்டார் பெரியோர் சுடாதார் இழிகுலத்தோர்
சட்டத்தில் உள்ள ஷரத்து

25 April 2011

கேள்வியும் நானே பதிலும் நானே

பின் நவீனத்துவ எழுத்தாளர் இணையத்தில் இலவச நாளிதழ் தொடங்கினால் என்ன பெயர் வைப்பார்?

தினப் புட்டு

24 April 2011

விகாரங்களும் விஸ்வரூபங்களும்

ஜெயமோகனின் ஆர்வலர் ஒருவருக்கும் எனக்கும் சில மாதங்களுக்கு முன் ஜெமோவை விமர்சித்தது குறித்து சிறு மனஸ்தாபம் உண்டானது. அவர் ட்விட்டரில் என்னைப் பற்றிக் கொஞ்சம் மோசமாய் எழுதினார். என்னளவிற்கு இல்லை, எனினும் அவரளவிற்கு மோசம் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் தெரிந்த எளிய எதிர்வினையாக அவரை ப்ளாக் செய்தேன். 

21 April 2011

இலக்கியக் கலோரிகள்



fromKanakkadalan 
toவிமலாதித்த மாமல்லன்
dateThu, Apr 21, 2011 at 12:26 PM
subjectவணக்கம்
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 12:26 PM (35 minutes ago)
அன்பின் மாமல்லன்,
தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றை எனது பதிவில் இட்டுள்ளேன். ஏதேனும் தவறிருப்பின், சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
நன்றி,

கனாக்காதலன்

கனாக்காதலன்,

உங்களுக்குத் தோன்றுவதை நீங்கள் எழுதுவதற்கு என்ன தயக்கம். 

20 April 2011

சிறு (விமர்சனக்) கவிதைகள் சில - பிரமிள்



tamil mani

 to me
show details 12:51 PM (11 hours ago)
Dear Sir,
On the web yours is the only blog which devotes more pages
for introducing Piramil's wonderful poems. Sir, if i remember correct
tomorrow is
Piramil's birthday, I am just mentioning this to you with hopes to get
some bonus posts on Piramil.
Thanks for the post on Borges.
With regards,
G.Tamilmani

நன்றி. நினைவுபடுத்தியதற்கு நன்றி. 

பிரமிள் (20.04.1939 - 06.01.1997)

என்றேன் என்றார்

19 April 2011

சுயரூபம் - கு. அழகிரிசாமி தட்டச்சு வடிவில்

வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ ம்ழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை வெட்டிகள் கிடைக்காமலும் போய், அகவிலைகளும் தாறுமாறாக ஏறிக்கொண்டுவிடவே, அந்தக் கிராமத்தின் பெரும்பாலான வீடுகளில் ‘உண்டு’ என்று சொல்லுவதற்கு அந்தப் பழம்பெருமை ஒன்றுதான் மிஞ்சியிருந்தது.

18 April 2011

விதி சமைக்கிறவர்களாய் வேஷம் கட்டாத அசல் ஆளுமைகள்

’அன்பளிப்’பைப் பற்றி ஹிந்துவில் மதிப்புரை எழுதிய நேரத்தில் க.நா.சு.விற்கும் அழகிரிசாமிக்கும் நேர்ப்பழக்கமே கிடையாது. அதுமட்டுமல்ல, அழகிரிசாமி ரகுநாதனுடைய உலகத்தைச் சேர்ந்தவர். ரகுநாதனுடைய உலகத்திலிருக்கிறவர்களுக்கு க.நா.சு.வைப் பிடிக்காது. ரகுநாதனுக்குக் க.நா.சு.வைச் சுத்தமாகப் பிடிக்காது.

17 April 2011

பிரமிளின் தெற்குவாசல் / ரவீநன் தெரு


fromSenthil Muthusamy 
tomadrasdada@gmail.com
dateSun, Apr 17, 2011 at 9:51 AM
subjectPiramil Poetry
mailed-bygmail.com
signed-bygmail.com
hide details 9:51 AM (3 hours ago)
Mr. Mamallan:

I saw your posting of Piramil translation poetry, if you have "raveenan theru", and "therkku vasal" from Piramil, please send it to me. Thanks,

Senthil

ச்சும்மா கதை சொன்ன கு.அழகிரிசாமி!

1980ல் அசோகமித்திரனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத வந்தேனேத் தவிர, கூடித்திரிந்த சேக்காளிகளெல்லாம் அப்பிராமண தெற்கத்திக்காரர்கள்தான். 

16 April 2011

பிரமிளின் இரண்டு தமிழாக்கக் கவிதைகள்

Your interest is in the bloody loam
But what I'am after
Is the finished product.

'PATERSON'
by WILLIAM CARLOS WILLIAMS

14 April 2011

கொடுக்கவா எடுக்கவா? நோ பீஸ் ஆஃப் மைண்ட்!

நற்பண்புகளின் அறவுருவாய்த் திகழும் ஜெயமோகன் அவர்களின் சமீபத்திய திருவாய் அமுது, ஞானபீடம் April 13th, 2011. 


”வாசித்தேன். 
என்பேரைச் சொல்லியிருந்தீர்கள். நன்றி. நான் ஒரு ஞானபீடத்தை கொடுக்க வாய்ப்பிருக்கிறது, பெறுவதற்கு முற்றிலும் இல்லை.” 


நிறைய எழுதுதல் என்பதை மட்டுமே தகுதி எனக் கொண்டால் எந்த விருதும் ஜெயமோகனைத் தவிர எவருக்குமேக் கிடைக்க வாய்ப்பில்லை என்பது எவருமே மறுக்க முடியாத உண்மை.

12 April 2011

எம்டிஎம் இடமிருந்து பேயோனுக்கு ஒரு செய்தி - என் வழியாக


Meenakshipuram Deivakumar Muthukumaraswamy April 12 at 11:51am Report
அன்புள்ள மாமல்லன்:
பேயோன் என்ற பெயரில் எழுதுவது நானில்லை என்று உங்களுக்கு உறுதிபட தெரிந்துவிட்டதாக நண்பர் கடற்கரை மூலம் அறிந்து பெருமூச்செரிந்தேன்.

எல்லாம் ஸ்வாமிகள்!

கவிஞர் விக்ரமாதித்யனின் தலைப்பற்ற ஒரு கவிதை.

எல்லாமே
தீக்ஷைபெற்று
பட்டங்கட்டி
பரிபாலனம் செய்துவரும் ஸ்வாமிகள்தாம்

11 April 2011

சிகாகோ சதி விசாரணை!

1968ல் வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிகாகோ பூங்காக்களில் இளஞர்கள் திரள்கின்றனர். எழுத்தாளர்கள் கவிஞர்கள் பாடகர்கள் எனக் கலைஞர்கள் அடங்கிய கூட்டம் பாட்டும் ஆட்டமும் கூத்துமாக அமெரிக்க அரசை எதிர்த்துக் கண்டனங்கள் முழங்கப்படுகின்றன. உலக மக்கள் சுதந்திரத்தின் மகத்தான காவலர், அடக்குமுறையில் இறங்கி அடித்து நொறுக்குகிறார். ஏழு நபர்கள் ஜனநாயக ரீதியில் கைது செய்யப்பட்டு அரசுக்கு எதிராய் சதி செய்ததாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

09 April 2011

ஆலன் கின்ஸ்பெர்க் வாசிப்பில் - Howl கவிதை

Allen Ginsberg
fromAnand Sigamany 
tomadrasdada@gmail.com
dateSat, Apr 9, 2011 at 8:39 AM
subjectHOWL - Allen Ginsberg's Poetry reading - AUDIO
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 8:39 AM (10 hours ago) 

நண்பரே, கின்ஸ்பெர்கின் ஒன்பது கவிதைகள் கொண்ட   'Howl and Other Poems ' audio CD  இன்றும்  பிரபலம். இத்துடன் அனுப்பியிருக்கும்   audio file இல் கின்ஸ்பெர்க் குரலில் ’  ஹௌல்’ கவிதையைக் கேட்கலாம் . கூடவே ஒரு கொசிறும் (foot note) அனுப்பப்படுகிறது.   Enjoy.- ஆனந்த்.

மருதா வெளியிட்ட சில பொக்கிஷங்கள் கிழக்கு ஆன்லைனில் கிடைக்கின்றன

அன்புவழி என்கிற பெயரில் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டு ஏ.கே.கோபாலன் அவர்களால் 50களில் வெளியிடப்பட்ட பேர்லாகர் குவிஸ்டு எழுதிய பாரபாஸ் ((மருதா பதிப்பகம்) நாவல் இப்போது கிழக்கு புக் கிளப்பில் https://www.nhm.in/shop/100-00-0000-157-0.html விலை 70/-

சாரு குறிப்பிடும் ஆலன் கின்ஸ்பெர்க் எழுதிய howl என்கிற கவிதை

சாரு குறிப்பிட்டிருக்கும் ஆலன் கின்ஸ்பெர்க் எழுதிய Howl என்ற கவிதையைத் தேடிப் படித்தேன். 

08 April 2011

இலக்கியம் வாழ்க்கையிலிருந்தே பிறக்கிறது, மூளையிலிருந்து அல்ல

கண்டு கேட்டு வாழ்ந்த அனுபவமே கலையாய் உயர முடியும் - எந்தக் காலத்திலும்.

மேதமை என்ன தட்பவெப்பமா இடத்திற்கு இடம் காலத்திற்குக் காலம் மாறுபட.

தி.ஜானகிராமன் மோகள் முள் நாவலை எழுதியது எப்படி என்று 1961ல் கூறுவதைப் படித்துப் பாருங்கள்.

மோகமுள் எழுதியதால் மட்டுமல்ல - எழுதியதை எப்படி எழுதினேன் என்று எழுதும் போதும் திஜா திஜாதான்.

எஸ்ரா பவுண்ட் எதிர்ப்புக் கவிதைகள் ஏழு - பிரமிள்


       

                   EZRA POUND (1885 - 1972)      பிரமிள் (1939 - 1997)

அதிரடி

அட்டுப் பிடித்த பத்திரிகைகளுக்கு 
அரோகரா!
வாய்க்கட்டுப் போடப்பட்ட
விமர்சகர்களின் பாடும் அதோகதி!
அவர்களின் குடல்களை
புழுக்கள் குதறட்டும்.
புத்துணர்வு வேண்டாம் என்றவர்களின்
பிணக்குழிகள் இதோ!
இவர்களின் தொழில் 
ஒத்தூதல், கட்சி கட்டுதல்.
ஏய், வேசித் தொப்பை முடக்குவாதி!
உன் கதியும் இதுதான்!
எழுத்தின் சுதந்திரம், உந்நதம்
இரண்டுக்கும் நீ
பரம வைரி!
ஏய் காளானே!
விட்டுக் கொடுக்காத 
புற்றுவியாதி நீ!

06 April 2011

ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் பற்றி கொல்லிப் பாவையில் சுந்தர ராமசாமி

அது அந்தக் காலம். உயர்ந்த விஷயங்களை எழுத்தாளர்கள் வாசகனுக்கு எடுத்துச் சொல்லியது.

இது இந்தக் காலம். எழுத்தாளர்கள் தங்களை உயர்வாய் எடுத்துச் சொல்லிக் கொள்ளுவது. 

எழுத்தாளன் தன்னைப் பற்றிப் பெருமையாய்ப் பேசவேக் கூச்சப்பட்டது அது அந்தக் காலம்.

தன் பெருமையைத் தானே பேசுவதோடு அல்லாமல் எப்படி எல்லாம் தன்னை வாசகன் பெருமையுடன் பேச வேண்டும் என்று வகுப்பெடுப்பது இது இந்தக் காலம்.

விசிலடிப்பதை நிறுத்தி, எழுத்தைப் பற்றிக் கொண்டு ரசிகன் தீவிர வாசகனாகப் போவது, அது எந்தக் காலம்? 

எழுத்தாளர்கள் பெயர் உதிர்க்காமல்,எழுத்தாளர்களைப் பற்றி எழுதி எழுத்தாளர்களை உருவாக்கிய பொற்காலத்தில் இருந்து சில பக்கங்கள்.

அறிவுஜீவிகள் அடென்ஷன் ப்ளீஸ்!

பைத்தியக் காரன் - @ ஐஸ் புரூட்,

மாமல்லனை நான் ஃபாலோ செய்வதில்லை. அவரும் என்னை பின் தொடர்வதில்லை. என்றாலும் எனது பஸ்ஸை அவர் பார்க்கவும், படிக்கவும் செய்கிறார். 

ஆனால், அவர் பஸ்ஸை நான் பார்ப்பதில்லை. எனவே அவர் எழுதியது எனக்கு தெரியாது.

இப்போது நீங்கள் அவர் பஸ்ஸில் எழுதியதை சுட்டிக் காட்டி எந்தளவுக்கு அவர் கீழ்த்தரமானவர் என்பதை அவரை ஃபாலோ செய்யாதவர்களுக்கு புரிய வைத்திருக்கிறீர்கள். 

அவரை கண்டிக்கிறேன்.2:11 pm

எனது 210 பஸ் ஃபலோயர்களுக்கும் 230 ரீடர் ஃபாலோயர்களுக்கும் எண்ணிக்கையறியவியலா ப்ளாக் ஃபாலோயர்களுக்கும் ஒரு விண்ணப்பம். 

திட்டுவதற்காகக் கூட தயவு செய்து என்னை ஃபாலோ செய்யாதீர்கள். 

சுகுமாரன் என்னைக் கிண்டலடிக்கிறானோ! - அஞ்சலில் வந்த கவிதை

fromsukumaran narayanan 
toவிமலாதித்த மாமல்லன்
dateWed, Apr 6, 2011 at 10:01 AM
mailed-bygmail.com
signed-bygmail.com

hide details 10:01 AM (2 hours ago) 
-- 
SUKUMARAN

'Madhyamavati'
MGRA F 53 Anayara
Thiruvananthapuram 695029
Phone 98950 99248/ 9489294023/  0471 2741287

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.docவரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு.doc
28K   View   Download  

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு சந்திப்பு
@ சுகுமாரன்

நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று
மதுரை விடுதியறையில் 
மூட்டைப் பூச்சியைச் சந்தித்தேன்.

05 April 2011

தகவல் களேபரங்களும் தற்காலத் தமிழ் ஆளுமைகளும்

jorge luis borges
On Mon, Apr 4, 2011 at 2:49 PM, ............wrote:
Dear Sir,
From the link provided in your blog i read Charu's post where he mentions Borges' story ' Approach to Al Mutasim' . In Borges story the only mention of Trichinopolis occurs when the protagonist tells about the disappearance of the two cigarettes made in Trichinopolis along with a few silver coins because of the thief. However Charu writes that Borges has talked about the Muslim abundance in Trichi and a muslim searching for stone after urination.
May  be he has forgotten the story which  he might have read long back.
yours,
.............

தங்கள் மின்னஞ்சலையும் தங்கள் பெயரையும் இருட்டடிப்பு செய்தமைக்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது அந்த எழுத்தாளரின் தற்கொலைப்படையினரிடம் இருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டியே செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை. மற்றபடிக்குத் தாங்கள் சம்மதித்தால் இரண்டையும் திறந்து விடுவ்தில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.

03 April 2011

லெனினை வாங்குதல் - மிரோஸ்லாவ் பென்கோ (சுகுமாரன்)

Miroslav Penkov (1983 - )

மேற்படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்து கொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். 'புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே' என்று தொடங்கியிருந்தது குறிப்பு. 'விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா'. 1991 ஆம் வருடத்திய தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறமான கசங்கிய வாக்குச்சீட்டில் அது எழுதப்பட்டிருந்தது. தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று அது. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்தும் அதில் இருந்தது. 

02 April 2011

பிழைகளும் திருத்தமும், திருந்தமுடியாத காழ்ப்பின் பிழைகளும்


மரியாதைக்குரிய அற்பவாதி மாமல்லனுக்கு,

இதுதானா உங்க டக்கு? ஐயோ... ஐயோ... 

இணையம் என்கிற மாய யதார்த்தம்



“ராயர் கஃபேவை மூடி பல ஆண்டுகள் ஆகி விட்டது.  இருந்தாலும் அதில் சமீபத்தில் சாப்பிட்டதாக ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கிறார்.  இதையெல்லாம் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது” 

*******************
கீழே இருப்பது என் ராயர் கபே பற்றிய என் பதிவு

Saturday, March 19, 2011

ஏதோவொரு நாளில் - காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (விமலாதித்த மாமல்லன்)


ஏதோவொரு நாளில்
கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: விமலாதித்த மாமல்லன்

மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார். கழுத்துப்பட்டி இல்லாத சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் சட்டை இணையும் இடத்தில் தங்க பித்தான் பொறுத்தப்பட்டிருந்தது. அவரது பேண்டை, தோளைச்சுற்றிய பட்டைகள் தாங்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்த பக்கையான உடலுடன் இருந்தவரின் தோற்றமானது சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல், செவிடர்களின் குவிப்பற்ற பார்வையை ஒத்திருந்தது. 

01 April 2011

விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (சுகுமாரன்)

நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும்  யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.