31 December 2010

ஸ்ரீலஸ்ரீ

உண்மை ஞானத்துடன் ஊழிக்கூத்தாடும் ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை தொகுப்பில் இருந்து

ஸ்ரீலஸ்ரீ

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பைப் பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார். அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மெலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு

*******************************

இந்தக் கவிதையை எந்த ஒரு புத்தகமும் படிப்பது போல் வாசித்து இருப்பீர்கள். முடித்ததும் ஒரு குறுநகை உதட்டோரம் தவழ்ந்து கொண்டு இருக்கும்.

ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக இன்னொருமுறை கொஞ்சம் வாய்விட்டுப் படியுங்கள்.

கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு

போல ராகம் போட்டு படித்தால் கவிதை புதிதாய்த் தெரியும்.
உள் அர்த்தங்கள் புரியும்.
போலி ஆன்மீகம் புலப்படும்.
புரட்சிக்காரன் எழுத வேண்டிய கவிதை.
பாவப்பட்ட இலக்கியவாதியான கவிஞர் ஞானக்கூத்தன் எழுதி இருக்கிறார்.

ஆஃபீ சுக்கு டைமாச்சு
மாலை வந்து பேசிக்கறேன்
பேசிக்காக நான் சொல்ல
வந்தது என்ன புரிகிறதா?

காமாட்சிக்கும் டாடா பை
கொமட்லகுத்து. வேணாம் பொய்
மாமல்லன்டா மாமல்லன்
மாமா இல்லே நான் மல்லன்

ஸியா!